ஷாலினிக்கு அந்த பிரச்சனை… அஜித் மாதிரி கணவர் கிடைக்க கொடுத்து வச்சியிருக்கணும்!

ஷாலினிக்கு அந்த பிரச்சனை… அஜித் மாதிரி கணவர் கிடைக்க கொடுத்து வச்சியிருக்கணும்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பிரபல பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி குறித்து பேசி இருக்கிறார். அதாவது, அஜித் போல் ஒரு கணவன் கிடைக்க ஷாலினி மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

அதேபோல் ஷாலினி போல் ஒரு மனைவி கிடைக்க அஜித்தும் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் அஜித் ஒரு மிகச் சிறந்த மனிதர். தன்னுடைய குடும்பமாக எல்லா ரசிகர்களையும் நினைப்பவர்.

மேலும் அவர் ரசிகரின் நலனில் மிகவும் அக்கறை கொண்டிருப்பார். இதைத் தொடர்ந்து ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்து பேசி அவர் , ஷாலினி மருத்துவமனையில் இருந்தபோதே அஜித் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நேராக சென்னைக்கு வந்து மனைவியை சந்தித்து அவருடன் சில நாட்களைக் கழித்து மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டார்.

நடிகை ஷாலினிக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்தார்கள் அறுவை சிகிச்சைக்கு பின் அவர் எந்த ஒரு வெயிட்டான பொருளையும் தூக்கவே கூடாது. அப்படி இருந்தால் தான் அவர் கூடிய விரைவில் குணமாகி வர முடியும் என கூறி இருக்கிறார். இதையடுத்து அது ஷாலினியை மிகுந்த அக்கறையோடு அஜித் கவனித்துக் கொள்வதாகவும் சபிதா ஜோசப் அந்த பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி , அஜித் , shalini , ajith , cinema news , Kollywood news ,