ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்த நடிகர் அஜித்!, படம் நடிப்பதை விட்டுவிட்டு கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளாரா?

ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்த நடிகர் அஜித்!, படம் நடிப்பதை விட்டுவிட்டு கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளாரா?

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், மீண்டும் கார் ரேஸில் ஈடுபட இருக்கிறார். 2025ல் ஐரோப்பியாவில் நடக்கும் GT4 சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். இது குறித்த தகவலை formula 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.

இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் தல என்றே அன்புடன் அழைக்கிறார்கள். இப்போது இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் விடா முயற்சி படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், அது அடுத்தாண்டு ரிலீஸாக உள்ளது. சினிமா ஷூட்டிங்: சினிமாவில் நடித்தாலும் அதைத் தாண்டி அஜித் குமாருக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸில் தான் ஆர்வம் அதிகம். சூட்டிங் இல்லாத நேரத்தில் இதில் ஆர்வமாக ஈடுபடுவார். முன்பு இவர் கார் ரேஸிலும் ஈடுபட்டு வந்தார். அதில் மோசமான விபத்தில் அஜித் சிக்கிய நிலையில், அதன் பிறகே கார் ரேஸுக்கு குட்பை சொன்னார். இதற்கிடையே நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார். 2025ல் ஐரோப்பாவில் நடக்கும் GT4 சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டது. இதற்காக சில அணிகள் உடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே நடிகர் அஜீத் குமார் மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு வர உள்ளதை முன்னாள் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உறுதி செய்துள்ளார்.

இவர் அண்மையில் படங்கள் நடிப்பதற்கு போகாமல் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொள்வதை பார்த்தால் இவர் படம் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார் போல தான் அவர் ரசிகர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

Actor ajith,car race, அஜித் குமார்.Cinima news,Kollywood.