இந்தியாவுக்கு செல்லும் மஸ்க்; கடுப்பில் டிரம்ப்

எலான் மஸ்க் தனது நிறுவனம் மூலம் இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு அநீதி என்று டிரம்ப் சாடியுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த போது, எலான் மஸ்க்குடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அமெரிக்​கா​வின் முன்னணி கார் தயாரிப்பு நிறு​வனமான டெஸ்லா இந்தியா​வில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சு​வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியது.

இதையடுத்து, டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிய இந்தியா​வில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பான விளம்​பரத்தை வேலைவாய்ப்பு பக்கத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டது. இது பெரும் பேசுபொருளாக உருவெடுத்தது.
.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிரபர் டிர்ம்ப், “ எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தால், அது நமக்கு அநீதி இழைப்பது போன்றாகும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறது. “ என்றார்.

இதனால் எலான் மஸ்க்கிற்கும், டிரம்பிற்கும் உரசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், இதுவரையில் டிரம்பின் பேச்சுக்கு மஸ்க் தரப்பிடம் இருந்து எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.