‘கிங்டம்’ படத்திற்கு பெரும் சிக்கல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

‘கிங்டம்’ படத்திற்கு பெரும் சிக்கல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி விநியோகஸ்தர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, ‘கிங்டம்’ திரைப்படம் திரையிடுவதற்கு போதிய காவல்துறை பாதுகாப்பை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.

மனுதாரரான SSI புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திரைப்படத்தை திரையிட வேண்டாம் என மிரட்டுவதாகவும், இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் அச்சப்படுவதாகவும் குற்றம்சாட்டியது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தணிக்கைத் துறை அனுமதி அளித்த ஒரு திரைப்படத்தை வெளியிடுவதைத் தடுப்பது, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பது ஆகும் என வாதிடப்பட்டது. இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இதனால், ‘கிங்டம்’ படத்திற்கு திரையரங்குகளில் நிலவிய அச்சம் முடிவுக்கு வந்தது.