பிரபல நடிகை பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள்!

பிரபல நடிகை பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குகள்!

நடிகை வித்யா பாலன் பெயரில் நபர் ஒருவர் போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி பலரிடம் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை வித்யா பாலன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பாலோ தேகோ என்ற படத்தில் நடித்தன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர், முன்னாபாய், ஹே பேபி, பூல் பூலையா, குரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை வித்யா பாலன் பெயரில் நபர் ஒருவர் போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி பலரிடம் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் வித்யா பாலன் பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கிய அந்த நபர் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வித்யா பாலனுக்கு தகவல் தெரியவந்த நிலையில், போலி சமூக வலைதள கணக்கு தொடங்கிய நபர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.