தத்தெடுத்து குழந்தை வளர்க்கும் அபிராமி….. ஃபேமிலி போட்டோ வைரல்!

தத்தெடுத்து குழந்தை வளர்க்கும் அபிராமி….. ஃபேமிலி போட்டோ வைரல்!

நடிகை அபிராமி என்று சொல்வதை விட விருமாண்டி அபிராமி என்று சொன்னவுடன் மக்கள் எல்லோருக்கும் மனதில் டக்குனு வந்துவிடுவார் அபிராமி. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டு தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் வானவில் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். முதன் முதலில் 1995இல் மலையாளத்தில் வெளிவந்த கதா புருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார் அபிராமி.

அதன் பிறகு 1999இல் சிரோஷியோவின் நடிப்பில் மூலம் வெளிவந்த பத்திரம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அபிராமிக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது என்றே சொல்லலாம். அதன்மூலம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டார் அபிராமி. அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் படத்தின் மூலம் ஹீரோயினாக தான் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்ததால் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த படத்தில் அவரது நடிப்பு மக்கள் எல்லோரையும் வியந்து பார்க்க செய்தது. இன்றளவும் அபிராமி என்று சொல்வதை விட
விருமாண்டி அபிராமி என்று சொன்னவுடன் மக்கள் எல்லோரும் டக்கென நியாபத்திற்கு வந்திடுவார்.

தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காதால் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட அபிராமி கடந்து 2009 ஆம் ஆண்டு ராகுல் பவணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் ஆனாலும் அவரை இன்னும் மக்கள் மறந்த பாடு இல்லை. பல வருடங்களுக்கு பிறகு 36 வயதிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அபிராமி தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். கணவர் , குழந்தை என அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.