ஆண் உறுப்பில் 80V வால்ட் மின்சாரத்தைப் பாய்ச்சி கொடூரம்- ரஷ்ய பொலிசார் செய்யும் வேலை !

ஆண் உறுப்பில் 80V வால்ட் மின்சாரத்தைப் பாய்ச்சி கொடூரம்- ரஷ்ய பொலிசார் செய்யும் வேலை !

 

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்வு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்தது யாவரும் அறிந்ததே. 4 துப்பாக்கிதாரிகள் சுட்டதில் இதுவரை 145 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதில் 4 பேரையும் ரஷ்ய உளவுப் பிரிவினர், உயிரோடு பிடித்துள்ளார்கள். இதில் முக்கிய சந்தேக நபரான ஒருவரை, நிலத்தில் படுத்தி அவரது ஆண் உறுப்பில் 80V மின்சாரத்தை செலுத்தி சித்திரவதை செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Shamsuddin Fariddun என்ற இந்த நபரை, ரஷ்ய புலனாய்வுத்துறையினர் சித்திரவதை செய்யும் காட்சி, அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இன் நபர் பலரைக் கொலைசெய்த மிருகமாக இருக்கலாம். ஆனால் அதற்கான நாமும் மிருகமாக மாற முடியாது அல்லவா ? அப்படி என்றால் எமக்கும் அன் நபருக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது ? நீதிமன்றில் நிறுத்தி உச்சபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதே பொலிசாரின் கடமை.

இன்று திங்கள் காலை இன் நபரை நீதிமன்றம் கொண்டு செல்ல உள்ளதாக ரஷ்யப் பொலிசார் மற்றும் பிலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளார்கள். அதற்கு உள்ளே அவர் ஒரு நடை பிணமாக மாறவே வாய்ப்புகள் அதிகம்.

4 பேரின் இன்றைய நிலை இதுதான், காது கன்னம் எதுவுமே சரியாகத் தெரியவில்லை. அந்த அளவு அடி விழுந்துள்ளது. !