காதலியான நிறைமாத கர்பிணியை மின்சார வயரால் கொலை செய்த சோமாலி இளைஞர் !

காதலியான நிறைமாத கர்பிணியை மின்சார வயரால் கொலை செய்த சோமாலி இளைஞர் !

ஏழு மாத கர்ப்பிணி பெண், தனது வளர்ந்து வரும் வயிற்றின் புகைப்படங்களை உற்சாகமாக சோஷல் மீடியாவில் பகிர்ந்துகொண்டு இருந்தார். ஆனால் அந்த முஸ்லீம் அல்லாத பெண்ணை எப்படிக் கொண்டுபோய் தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்துவேன் என்று கருதிய சோமாலிக் காதலன், அவளை கட்டிலில் வைத்து துடிக்கத் துடிக்க மின்சார வயரால் கழுத்தை சுருக்கிக் கொன்றுள்ளார்.

20 வயதான சாகா ஃபோர்ஸ்‌க்ரென் Swdeish தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து இரண்டு மணி நேர தூரத்தில் உள்ள Örebro நகரில் வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். அவளது காதலன், 22 வயதான சோமாலியாவைச் சேர்ந்த முகமதுஅமீன் அப்திரிசெக் இப்ராஹிம் ஆகும். பெண்ணின் குடும்பத்தார் கூறுகையில், அவள் தாயாக வருவது குறித்து மகிழ்ச்சியடைந்ததாகவும், அவள் தனது வயிற்றின் புகைப்படங்கள், ஸ்கேன் படங்கள் மற்றும் அவளது கர்ப்ப பரிசோதனை முடிவுகளை அவளது அன்புக்குரியவர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டதாகவும் கூறினர்.

ஒரு செல்ஃபி படத்தில், சாகா கர்ப்பமாக இருப்பது காட்டப்பட்டுள்ளது, அவளது படுக்கையறையில் அன்பொடு தயாரிக்கப்பட்ட தொட்டிலின் அருகே அவள் நிற்கிறாள், அவளுடைய மகன் எசாயாவின் வருகைக்கு தயாராக இருக்கிறாள்.அவள் தனது அன்பானவர்களுக்கு அவளது மகனின் ஸ்கேன் படங்களையும், அவளது கர்ப்ப பரிசோதனை முடிவின் படத்தையும் அனுப்பித்தாள்.

இருப்பினும் ஈவு இரக்கம் இன்றி, இந்த சோமாலியக் காதலன் அவளைக் கொன்றுள்ளான் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிகழ்வு சூவீடன் நாட்டையே அதிரவைத்துள்ளது.