ஷங்கரின் மகள் கல்யாணத்திற்கு நடிகர் பரத் பத்திரிகை வைத்துக் கொண்டு அலைகிறார் !

ஷங்கரின் மகள் கல்யாணத்திற்கு நடிகர் பரத் பத்திரிகை வைத்துக் கொண்டு அலைகிறார் !

பாஃய்ஸ் திரைப்படம் மூலமாக , பரத்தை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். இதனால் நடிகர் பரத் எப்பொழுதும் சங்கர் சொல்லை தட்டுவே இல்லையாம். தற்போது இயக்குனர் ஷங்கர் மிகவும் மும்மரமாக வட நாடு சென்று பத்திரிகை வைத்து வருகிறார். இதனால் அவருக்கு நேரம் போதவில்லை. எனவே அவர் பரத்தை அழைத்து, சில பத்திரிகையை கொடுத்து, இதனை நீங்களே கொண்டு போய் கொடுத்து. முறையாக கல்யாண வீட்டுக்கு வருமாறு அழையுங்கள் என்று ஒரு பொறுப்பை கொடுத்துள்ளாராம்.

இதனால் ஷங்கர் மகளின் கல்யாண பத்திரிகையை, கையோடு எடுத்துக் கொண்டு நடிகர் பரத் ஒரு வலம் வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை ஷங்கரின் மகள் அதிதி, நடிகை மற்றும் நடிகர்களுக்கு அப்பா சார்பாக பத்திரிகையை கொடுத்து வருகிறார். என்ன தான் இருந்தாலும் இயக்குனர் ஷங்கர் அவர்களின் வட்டம் மிக மிகப் பெரியது அல்லவா ? அனைவருக்கும் பத்திரிகை வைப்பது என்பது மிக மிக கடினமான வேலை.

ஷங்கர் தற்போது டெல்லி மும்பை என்று வடக்கே சென்று, அங்குள்ள மிக முக்கிய நபர்களுக்கு தனது மகளின் கல்யாண பத்திரிகையை கொடுத்து வருகிறார்.