யாழில் ஆலயத்தை தேர்தல் மேடையாக்கிய பிரதமர்! தேர்தல் ஆணையம் முடங்கிப்போனதா!

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அதிரடியாக கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த சுமந்திரன், தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சினைகளை விசாரிக்கவோ அல்லது நிவர்த்தி செய்யவோ தேர்தல் ஆணையத்திடம் முதுகெலும்பு இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ள சுமந்திரன், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்ட அரசாங்கம், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் அவற்றை வெளிப்படையாக மீறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.