கொஞ்சி பேசும் நடிகையிடம் நெருக்கம் காட்டிய சூர்யா – வெளிநாட்டிற்கே ஓடவிட்ட ஜோதிகா!

சூர்யா

சினிமாவில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடிகளாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் தான் ஜோதிகா – சூர்யா தம்பதி. இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது நண்பர்களாக பழகி காக்க காக்க திரைப்படத்தில் காதலிக்க துவங்கினார்கள்.

பல வருட காதலுக்கு பிறகு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு மன நிம்மதியாக குடும்ப வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சூர்யா 3 ரோஸஸ் படத்தில் நடித்தபோது அப்படத்தில் நடித்த லைலாவுடன் நெருக்கம் காட்டி வந்தாராம்.

விஷயம் அறிந்த ஜோதிகா சூர்யாவை அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சந்தித்ததோடு லைலாவிடம் சிடுசிடுவென பேசினாராம். 3 ரோஸஸ் படத்தை ரம்பா தன் அண்ணன் உடன் இணைந்து தயாரித்திருந்தார். ஆனால் அந்த படம் வெளியாகி பெரும் தோல்வி அடைந்ததால் ரம்பா சினிமாவே வேண்டாம் என வெளிநாட்டிற்கே சென்று செட்டில் ஆகிவிட்டார்.