விசேட அதிரடிப் படையின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது பாராளுமன்றம், அதனைத் தொடர்ந்து கோட்டபாய தங்கியுள்ள வீடு, அவரது அலுவலகம் எல்லாமே ராணுவப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பொலிசார் பாதுகாப்பில் இருந்த வந்த பல இடங்களை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. இன் நிலையில் தற்போது கொழும்பு காலி முகத்திடலில் பெரும் மக்கள் கூட்டம் வெள்ளம் போல திரண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் விடுக்கும் ஒரே கோரிக்கை, கோட்டா வீட்டுக்கு போ என்பது தான்…. இந்த விண்ணைத் தொடும் சத்தத்தை கேட்டுக் கொண்டு இன்னும் பதுங்கிக் கொண்டு இருக்கிறார் கோட்டபாய….