நிருபர்கள் கேள்வி கேட்ப்பார்கள் என்று வேட்டையன் படப்பிடிப்பை தள்ளிப்போட்ட ரஜனி !

நிருபர்கள் கேள்வி கேட்ப்பார்கள் என்று வேட்டையன் படப்பிடிப்பை தள்ளிப்போட்ட ரஜனி !

ரஜனி தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் படம் தான் “வேட்டையன்”, படப்பிடிப்பு மிக சுறுறுப்பாக நடைபெற்று வந்த நிலையில். இம்மாதம் 19ம் திகதி வரை படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளிவைப்போமே என்று ரஜனி சொல்லியதால். இயக்குனர் படப்பிடிப்பை ஏப்பிரல் 19வரை நிறுத்திவைத்துள்ளாராம். ஏன் இப்படி ? ரஜனி என்ன பிரச்சாரத்தில் ஈடுபடப்போகிறாரா என்ற கேள்வி உங்கள் எல்லோருக்கும் வரும். அது தான் இல்லை.

படப்பிடிப்பு நடந்தால், அவர் பொது இடங்களுக்குச் செல்லவேண்டி வரும். அந்தவேளை பார்த்து ஏதாவது நிருபர்கள் அவரிடம் தறுமாறான கேள்விகளைக் கேட்க்க. அவரும் ஒரு எதார்த்தமாக பதில்சொல்ல. அது ஒரு பாதார்த்தமா மாறிவிடும் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறதாம். அதனால் தேர்தல் நேரத்தில் அவர் வழமையாகவே பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

நமக்கு எதுக்குப்பா வம்பு என்று நினைத்து, ரஜனி தற்போது பல இடங்களில் ஒதுங்கிச் செல்வதை அவதானிக்க முடிவதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பேச்சு ஒன்று அடிபடுகிறது.