பெற்ற தாயை பிரிய இது தான் காரணம் – வெளிப்படையாக கூறிய நாகசைதன்யா!

நாகசைதன்யா

தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் நாகசைதன்யா இவர் நாகார்ஜுனா மற்றும் லட்சுமி ரகுபதி தம்பதிக்கு 1986 ஆம் ஆண்டு பிறந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் இவர் பிரபல நடிகையான சமத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றுவிட்டார்.

நாகார்ஜுனா மற்றும் லட்சுமி ரகுபதி தம்பதி 1990-ல் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். விவாகரத்திற்கு பிறகு லட்சுமி டகுபதி தனது மகன் நாக சைதன்யாவுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். 19 வயது வரை அவர் தனது தாயுடன் வசித்தார்.

தாய் குறித்து பேசிய நாகசைதன்யா குழந்தை பருவத்திலும், பள்ளி வாழ்க்கையிலும் தனது தாயின் முடிவுதான் தனது வாழ்க்கையை மாற்றியது என்பார் நாக சைதன்யா. தனது தாய் லட்சுமி மிகவும் நேர்மையானவர் என்றும், அவரிடமிருந்து பல விஷ்யங்களை கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

நாகர்ஜுனாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற லட்சுமி, சுந்தரம் மோட்டார்சின் கார்ப்பரேட் நிர்வாகியான சரத் விஜயராகவனை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். தொழிலில் அதிக ஆர்வம் கொண்ட லட்சுமி, லட்சுமி இன்டீரியர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

லட்சுமி டகுபதி இரண்டாவது திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அம்மா லட்சுமி இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டதால் தான் நாக சைதன்யா தனது தாயிடமிருந்து பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது உண்மையில்லை என நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். மேலும், சினிமாவில் நடிப்பதால் தான் ஹைதராபாத்திற்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.