முதல் மனைவியிடம் பேசிவிட்டேன்…. விமர்சனத்திற்கு வரலக்ஷ்மி பதிலடி!

முதல் மனைவியிடம் பேசிவிட்டேன்…. விமர்சனத்திற்கு வரலக்ஷ்மி பதிலடி!

நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வாரிசு நடிகையான வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து சர்க்கார் மற்றும் தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து தனது வேறொரு ரூபத்தை வெளி காட்டினார்.

வரலட்சுமி நடிப்பு குறிப்பாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். இதனிடையே மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை 14 வருடங்களாக காதலித்து தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் அண்மையில் தான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் .

இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக அவர்களது ஜோடி பொருத்தம் சிறந்ததாக இல்லை என சமூக வலைத்தளங்களில் பல கேலி கிண்டல்கள் வெளியாகியது. இதற்கு பதிலளி கொடுத்துள்ள நடிகை வரலட்சுமி இது என்ன சினிமா திரைப்படமாக? ஹீரோ ஹீரோயின் ரொம்ப அழகா இருக்கறதுக்கு? இது என்னோட வாழ்க்கை அவர் ரொம்ப நல்லவர் அவர் வாழ்க்கைக்கு ஏற்றவர் எனக்கு பிடித்து விட்டது என்னுடைய வாழ்க்கை என்னுடைய முடிவு.

அதுமட்டுமில்லாமல் நான் அவரின் முன்னால் மனைவி மற்றும் மகளுடன் பேசி விட்டேன். அவரது மகளுக்கு சிறு வயது தான் என்றாலும் அவர் மிகவும் பொறுப்பானவர். . விளையாட்டுத்துறையில் அதிக பதக்கங்களை வென்றிருக்கிறார். மேலும் ஒருவருக்கு வாழ்க்கையில் ஏதேனும் மனக்கசப்பு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பிரிந்து வாழ்வதில் எந்த தவறும் இல்லை. சேர்ந்து வாழவேண்டும் என எந்த கட்டாயமும் கிடையாது. எனவே என்னுடைய திருமண வாழ்க்கை எனக்கு மனப்பூர்வமாக பிடித்து தான் இதை ஏற்றுக்கொண்டேன் என தெளிவாக கூறினார்.