US வர காசு கொடுத்த அகதிகள் தற்போது வெளியே தப்பி ஓட காசு கொடுக்கிறார்கள் !

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குள் சட்டத்திற்கு புறம்பாக நுளைய, பெரும் பணத்தைக் கொடுத்து அகதிகள் சென்ற காலம் போய். தற்போது அமெரிக்காவில் இருந்து தப்பி தமது நாட்டுக்கு அல்லது அருகில் உள்ள நாடுகளுக்கு செல்ல 2,000 முதல் 3,000 அமெரிக்க டாலர்களை செலுத்தி அகதிகள் வெளியேறி வருகிறார்கள் என்பது பெரும் அதிர்ச்சியான விடையம்.

அமெரிக்காவில் பல லட்சம் அகதிகள், விசா நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விசா காலாவதியாகிய நபர்கள் பல வருடங்களாக வசித்து வருகிறார்கள். ஆனால் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ரம் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், பொலிசார் வீடு வீடாகச் சென்று, அவர்களை பிடித்து நாடு கடத்தி வரும் நிலையில். இவ்வாறு நாடு கடத்தப்படும் நபர்கள், குறைந்த 15 வருடங்களுக்கு அமெரிக்க விசாவை எந்த ஒரு நாட்டிலும் வைத்து அப்பிளை செய்ய முடியாது.

இதற்கு பயந்து, தற்போது சட்ட விரோதமாக தங்கியுள்ள நபர்கள் அமெரிக்காவில் பொலிசாரிடம் பிடிபடாமல், தப்பி அமெரிக்காவை விட்டு வெளியேறி வருகிறார்கள். இவர்களை அமெரிக்காவில் இருந்து அண்டை நாடுகளுக்கு கடத்த மெக்ஸிக்கன் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் 2,000 அமெரிக்க டாலர்களை அறவிட்டு மக்களை அமெரிக்காவில் இருந்து வெளியே கொண்டு போய் விடுகிறார்கள்.