(இன்று) போதுமடா சாமி என்று என்று ஓட்டம் பிடித்த ஏர் இந்தியா பயணிகள் !

(இன்று) போதுமடா சாமி என்று என்று ஓட்டம் பிடித்த ஏர் இந்தியா பயணிகள் !

இன்று (ஜூன் 17) சற்று நேரத்திற்கு முன்னர், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் GATWICK செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் Fght A159 தனது பயணத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் பயணிகள் பெரிதும் குழம்பிப் போயிருந்தனர். நாளை மீண்டும் பயணம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பயணிகளுக்கு ஹோட்டல் வசதிகளும் செய்து தருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

பயணிகளும் பெருமூச்சு விட்டு, நாளை புறப்படலாம் என்று நினைத்த வேளையில், இன்று புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு, இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, பயணிகள் கிடு .. நடுங்கிப் போய்விட்டார்கள். “உங்கள் ஹோட்டலும் வேண்டாம்! ஆளை விட்டால் போதுமடா சாமி!” என்று ஓட்டம் பிடித்துள்ளார்கள் பயணிகள்.

இது போக, இந்த அறிவிப்பை அடுத்து, பலர் தமது பயணங்களை ரத்து செய்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவி வருவதால், மேலும் பல பயணிகள் ஏர் இந்தியா விமான சேவையை புறக்கணிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 241 பேர் பலியாகிய சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இன்று நடந்துள்ள சம்பவம் மக்களை கிலி கொள்ள வைத்துள்ளது.