கடந்த யூரோ மில்லியன் ஆட்டத்தில், 13, 22, 23, 44, 49 and the Lucky Stars are: 03, 05 என்ற இலக்கங்கள் வீழ்ந்தது. £208 மில்லியன் பவுண்டுகள் பரிசு என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில். இந்த இலக்கங்களை ஒருவர் சரியாகப் போட்டுள்ளார். ஆனால் அவர் தங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று லாட்டரி அறிவித்துள்ளது.
90 நாட்கள் மட்டுமே தாம் காத்திருப்போம் என்றும் நஷனல் லாட்டரி அறிவித்துள்ளது. பல மில்லியன் மக்கள் யூரோ மில்லியனை கடந்த வாரம்(செவ்வாய் 17) விளையாடி இருந்தார்கள். இதில் ஒருவருக்கு லாட்டரி அதிஷ்டம் அடித்துள்ளது. ஆனால் அவர் தனது டிக்கெட்ட்டை இதுவரை செக் பண்ணவே இல்லை என்பது பெரும் அதிர்ச்சிகரமான விடையம்.
இதனால் மிகப் பெரிய தொகையான 208 மில்லியன் பவுண்டுகள் ஊசலாடுகிறது. 90 நாட்கள் தான் இருக்கிறது. எனவே மக்களே உடனே நீங்கள் போட்ட லாட்டரி சீட்டை ஒரு முறை பார்ப்பது நல்லது. சற்று முன்னர் லாட்டரி நிலையம், அது பிரித்தானியாவின் அயர்லாந்தில் உள்ள ஒரு இடத்தில் போடப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் இதுவரை யாரும் அதனை உரிமை கோர வரவில்லை என்றும் அறிவித்துள்ளது.
அயர்லாந்தில் மிகப் பெரிய அளவில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்று வருவதோடு டாக்ஸ் சற்று குறைவாக இருப்பதால் பல தமிழர்கள் அங்கே குடிபோய் உள்ளார்கள். யாருக்குத் தெரியும் ? இந்த பணம் ஒரு தமிழருக்கு கூட சொந்தமாகலாம் …