கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மிகவும் அதி நவீன B2 ஸ்டெலத் விமானங்கள் 3 பறந்து சென்று ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்களை தாக்கி இருந்தது. அமெரிக்கா வைத்திருக்கும் மிகவும் அதி நவீன குண்டுகளை கொண்டு தாக்கியும், ஈரானின் அணு நிலையங்களை அழிக்க முடியவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
காரணம் இந்த 3 நிலைகளில் இருந்து எந்த ஒரு அணு கதிர்வீச்சு கசிவுகளும் ஏற்படவில்லை என்று சர்வதேச அவதானிப்பு நிலையம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. சர்வதேச நிலையத்திடம் பல சாட்டலைட்டுகள் உள்ளது. இதனைக் கொண்டு ஆராய்ந்த வேளை , எந்த அணு கசிவும் ஏற்படவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதனை வைத்துப் பார்க்கும் போது, ஈரானின் அணு நிலைகளை அழிக்க அமெரிக்கா அணு ஆயுதத்தை தான் பயன்படுத்தவேண்டி இருக்கும். ஆனால் அதற்கு ரஷ்யாவோ இல்லை சீனாவோ இடம் கொடுக்காது. ஏற்கனவே ரஷ்யா இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டது.
மேலும் ஈரானுக்கு டாட்டிகல் அணு ஆயுதங்களை வழங்க , சில நாடுகள் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ஈரான் இஸ்ரேல் மீது சிறிய ரக அணு ஆயுத ஏவுகணைகளை ஏவக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணத்தால் தான், இஸ்ரேல் ரம்பின் உதவிய நாட. ரம் 3 விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளார்.