ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் சக்தி வளங்களை கடலில் சட்டவிரோதமாக கடத்தும் என்று கூறப்படும் “Shadow Fleet” (நிழல் கப்பல் மன்றம்) மீதான நடவடிக்கையை ஒருமித்தமாக மேற்கொள்ள, ஐரோப்பியாவின் 14 நாடுகள் சேர்ந்து முடிவெடுத்துள்ளன. இந்நாடுகளில் பெல்ஜியம், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, ஐஸ்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, பிரான்ஸ், ஃபின்லாந்து, ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியா ஆகியவை உள்ளடங்குகின்றன. இக்கூட்டத்திற்கு பிறகு, யுகே வெளிநாட்டுச் செயலாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச கடல் சட்டங்களை மதிக்கும் வகையில் வழிகாட்டுதல் ஆவணங்களை ஒருங்கிணைத்து உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பால்டிக் கடல் மற்றும் வடகடலில் செல்லும் கப்பல்கள் சரியான தேசிய கொடியை பறக்கவிடாமல் இருந்தால், அவற்றின் மீதான நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்கள் உள்ளடங்கியவாறு எடுக்கப்படும்,” என்று 14 நாடுகளும் எச்சரித்துள்ளன. இவ்வாறு, சட்ட விரோத கப்பல்களை தடுக்க அனைத்து நாடுகளும் ஒட்டுமொத்தமாக செயல்பட முடிவெடுத்துள்ளன. மேலும், கடல் போக்குவரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது முக்கியக் குறிக்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ரஷ்யா சார்ந்த 300-க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்களை பிரிட்டன் தன் தடைப்பட்ட கப்பல்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. இவை யுகே துறைமுகங்களில் நுழைவதற்கும், யுகே கப்பல் பதிவேட்டில் இடம் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, யுகேவில் உள்ள ரஷ்ய தூதரகம், இந்த தடைகள் சட்டவிரோதமானவையும், தீவிரத் தாக்குதல்களாகவும், மாஸ்கோவின் நடவடிக்கைகளை மாற்ற இயலாதவையாகவும் கண்டித்துள்ளது.