ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறியவர் தான் ராம்ஸி. இவர் ஹரிஸ் என்ற இளைஞரோடு பழக ஆரம்பித்துள்ளார். ரம்ஸி அழகில் மயங்கிய ஹரிஸ் பல காதல் கவிதைகளை ரெக்ஸில் அனுப்ப. மோபைல் போன் ஊடாக இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. எந்த தருணத்திலும் தான் பிறப்பால் ஒரு ஆண் என்ற விடையத்தை, ராம்ஸி சொல்லவே இல்லை. இன் நிலையில் இவர்கள் அடிக்கடி சந்தித்து பழகி. கடைசியில் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த மாதிரியான வேளையில் கூட, ஹரியால் எந்த ஒரு விடையத்தையும் அவதானிக்க முடியவில்லை. உண்மையில் மருத்துவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அப்படியே தத்துரூபமாக அவரை பெண்ணாக மாற்றியுள்ளார்கள். (ஒரு பிரம்மனுக்கு சமமானவர்கள்).
இன் நிலையில் ராம்ஸி தனது காதலனோடு நிற்க்கும் புகைப்படங்களை சமூக வலையத்தளத்தில் போட. அதனைப் பார்த்த சிலர் ராம்ஸியை அடையாளம் கண்டு ஹரிக்கு விடையத்தை சொல்லியுள்ளார்கள். அவர் ஏற்கனவே கடுப்பில் இருக்க, வேறு சிலர் இதனைக் கிண்டல் செய்தும் போஸ்ட் போட்டு, ஹரிமை மேலும் சூடேற்றியுள்ளார்கள். இப்படி நடக்கிறது என்று எதுவும் தெரியாத ராம்ஸி, ஒரு நாள் ஹரியை பார்க்க மிகவும் சாதாரணமாக வந்துள்ளார்.
அதுவரை காத்திருந்த ஹரி, அன்று அவரை சரமாரியாகத் தாக்கியது மட்டுமல்லாது. கத்தி எடுத்து அவரை 9 தடவை திரத்தி திரத்தி குத்தியுள்ளார். அவரோடு நின்ற நண்பர்களும் ராம்ஸியை தாக்கியுள்ளார்கள். (கீழே வீடியோ உள்ளது. இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.) ஆனால் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ராம்ஸி அதிஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். தற்போது ஹரி மற்றும் அவரது 3 நண்பர்கள் என அனைவரும் கம்பி எண்ணுகிறார்கள். Source : DM-UK