கொழும்பில் உள்ள கனடா தூதுவருக்கு, தமது கடும் அதிருப்த்தியை இலங்கை அரசு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மே18ம் திகதி நடந்த கனடா பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய அன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி. மே18 ஒரு இன அழிப்பு நாள் என்று கூறி. தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். மே18ம் திகதியை தமிழர் இன அழிப்பு நாளாக பிரகடனப் படுத்தவேண்டும் என்று அவர் முன் மொழிந்தார். தீர்மானத்தை இலங்கை அரசு கடுமையாக எதிர்த்துள்ளதோடு, தனது ஆட்சேபனையும் அது கனடா நாட்டிற்கு தெரிவித்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.