கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாரா மலையாள சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா 1984ம் ஆண்டு பிறந்தார்.
டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக மாடலிங் மற்றும் விளம்பர துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார். ஐயா படத்தில் அவரின் பவ்யமான நடிப்பும், கிராமத்து பெண் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. குறிப்பாக பில்லா படத்தில் அவரது மாறுபட்ட வேடம் எல்லோரையும் விழிபிதுங்க வைத்தது. அதில் படு கவர்ச்சியாக நடித்து நடித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிரவைத்தார்.
அப்படத்தை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார். ஐந்தில் கூட ஜவான் படத்தின் மூலம் அறிமுகம் ஆஹி 1000 கோடி வசூலை குவித்துவிட்டார்.
இதனிடையே விக்னேஷ் இயக்கத்தில் ரவுடிதான் படத்தில் நடித்த போது அவரையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு உயிர், உலக என இரட்டை மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நயன்தாரா விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான் படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்ற தொடர்ந்து நயன்தாரா நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் 50 வினாடிகள் இவர் நடித்த டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் மாம்பழ ஜுஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க இவர் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
![athirvu](https://www.athirvu.in/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-16-at-21.10.15_c0543ad2-1024x576.jpg)
![athirvu](https://www.athirvu.in/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-16-at-21.10.58_20e0b9a7-1024x848.jpg)