தமிழ் சினிமாவில் 90ஸ் காக்கட்டங்களில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் குணசித்திர நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார்.
அம்மாவாக ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி , வேலையில்லா பட்டதாரி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது. மேலும் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான இரண்டு பிலிம் ஃபேர் விருதுகளை வாங்கினார்.
2010ஆம் ஆண்டுக்கான இந்திய தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாருடன் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. நடந்த இந்த தகராறில் சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.
![சரண்யா](https://www.athirvu.in/wp-content/uploads/2024/04/02-715x1024.jpg)
![சரண்யா](https://www.athirvu.in/wp-content/uploads/2024/04/03.jpg)
![சரண்யா](https://www.athirvu.in/wp-content/uploads/2024/04/01.jpg)