அயலான் வெற்றி… சூர்யாவோடு இணையும் இயக்குனர் ரவிகுமார்!

அயலான் வெற்றி… சூர்யாவோடு இணையும் இயக்குனர் ரவிகுமார்!

தமிழ் திரையுலகின் முதல் முழுநீள டைம் ட்ராவல் திரைப்படமான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இயக்கத்தில் உருவான அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸான இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இதையடுத்து ரவிகுமார் இப்போது அடுத்து இயக்கும் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே ரவிகுமார் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் சில காரணங்களால் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டு சூர்யா, வரிசையாக வேறு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது அயலான் வெற்றி பெற்றுள்ள நிலையில் சூர்யா ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை இப்போது தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் ரவிகுமாரும் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.