தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை ஒன்று சேர்த்த மகன்: கனவு நினைவானது !

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ், தனது மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்தப் புகைப்படத்தில், முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து மகன் யாத்ராவை கட்டி அணைத்தபடி “பெருமைமிகு பெற்றோர்கள்” (Proud parents) என்ற தலைப்புடன் காணப்படுகிறார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்த தனுஷ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிவதாக அறிவித்து, 2023-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். பிரிந்த பின்னரும், தங்கள் இரு மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரை வளர்ப்பதில் இருவரும் பொறுப்புள்ள பெற்றோர்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது வைரலாகியுள்ள இந்தப் புகைப்படம், மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் தம்பதியினர் ஒன்றிணைந்து தங்கள் மகனின் முக்கிய மைல்கல்லை கொண்டாடிய உணர்வுபூர்வமான தருணத்தை படம்பிடித்துள்ளது. ஆயிரக்கணக்கான விருப்பங்களைப் பெற்றுள்ள இந்த பதிவு, பிரிவுக்குப் பின்னரும் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அழகான எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பரவலான பாராட்டுகளை அள்ளி வருகிறது.