BREAKING NEWS :::லண்டன் கிளப்பத்தில் கெமிக்கல் அட்டாக்.. தீவிரவாத தாக்குதல் -பொலிசார் வலைவீச்சு !

BREAKING NEWS :::லண்டன் கிளப்பத்தில் கெமிக்கல் அட்டாக்.. தீவிரவாத தாக்குதல் -பொலிசார் வலைவீச்சு !

சற்று முன்னர் லண்டனில் உள்ள கிளப்பம் பகுதியில், கெமிக்கல்(அமிலம்) கொண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அம்மா மற்றும் அவரது 2 பிள்ளைகள் உட்பட, மேலும் 4 பேர் இந்த தாக்குதலால் படுகாய்மடைந்த நிலையில். தடுக்கச் சென்ற 3 பொலிசார் மீது ஒருவகை திரவத்தை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதனால் 3 பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும், காயமடைந்த 9 பேரும் ஐ.சி.யு வாட்டில் இருப்பதாகவும் பொலிசார் அறிவித்துள்ள அதேவேளை. பெரும் தேடுதல் வேட்டை ஒன்றை இரவோடு இரவாக ஆரம்பித்துள்ளார்கள் பொலிசார். கிளப்பம் பகுதியை லாக் டவுன் செய்து பெரும் தேடுதல் வேட்டையில் மெற்றோ பொலிசார் இறங்கியுள்ளார்கள். இதனால் பல வீதிகள் மூடப்பட்டு உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இது குறித்த அப்டேட் செய்திகளை தெரிந்துகொள்ள அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள்.