
கிளிநொச்சியில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியொருவர் தான் அழகுக்கலை நிபுணர் எனக் கருதி வட்சப் ஊடாக லண்டன் குடும்பஸதருடன் அறிமுகமாகியுள்ளார், பின்னர் இருவரும் தொடர்பைத் தொடர்ந்த நிலையில் குறித்த நபர் யுவதியைத் திறந்த மேனியுடன் பார்க்க வேண்டும் என ஆசைப்பட சமூக வலைத்தளத்தில் காணப்பட்ட வேறு ஒருவரின் படத்தை அனுப்பயதுடன் அதைப்பார்த்து மெய் மறந்த நபர் யுவதிக்குத் தேவையான பணத்தினை வாரி வழங்கியுள்ளார்.
இவ்வாறு பணம் தேவையானபோது குறித்த நபரின் பாலியல் பலவீனத்தையறிந்த யுவதி போட்டோக்களை அனுப்பி பணத்தினைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இதனையறிந்த குறித்த நபரின் மனைவி ஒன்லைன் மூலமாக இலங்கைப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விசாரணையினை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இதுவரையில் 45 இலட்சத்துக்கு மேற்பட்ட தொகையினை அனுப்பியுள்ளதாக அவருடைய மனைவி குறிப்பிட்டுள்ளார்.