வேட்டையன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டைக் கொடுத்த ரஜினிகாந்த்!

வேட்டையன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டைக் கொடுத்த ரஜினிகாந்த்!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து அடுத்த கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

அதற்காக சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட ரஜினிகாந்த் பத்திர்க்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “லால் சலாம் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கும் படத்தைத் தயாரித்த லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி. வேட்டையன் படம் 80 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் 20 சதவீத ஷூட்டிங் மட்டுமே உள்ளது. இந்த படம் முடிந்த பிறகு லோகேஷ் இயக்கும் படத்தில் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.