
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கின்றனர். 2016 ல் “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பின் 2017 ல் அஞ்சலி புத்ரா, சமக், என்ற படத்திலும் நடித்துள்ளார். 2018 ல் “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் பேமஸ் நடிகையாக மாறிவிட்டார். அதனை தொடர்ந்து 2021 ல் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார்.
கடந்த மாதம் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” படத்தில் கதாநயாகியாக நடித்துள்ளார். தற்போது சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் சிகப்பு நிற கோர்ட்டில் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.





