மேடை சிரிப்புரை அறிஞராக தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ரோபோ சங்கர். குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இவரது டைமிங் காமெடி எல்லோரது கவனத்தை ஈர்த்தபோது விரைவிலே பிரபலமாகிவிட்டார்.
விஜய் தொலைக்காட்சியின் சொத்து என சொல்லக்கூடிய அளவுக்கு ரோபோ சங்கர் அந்த டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே இவர் தமிழ் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை குணசேத்திர வருடங்களிலும் காமெடி கதா காத்திரங்களிலும் நடித்தும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவரது திரைப்பயணம் தீபாவளி திரைப்படத்தில் ஆரம்பித்தது. தொடர்ந்து ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி, புலி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் மிக முக்கியமான கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் ரோபோ சங்கரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
அண்மையில் ரோபோ ஷங்கர் மகள் இந்திராஜாவுக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மாப்பிள்ளை கார்த்திக் இந்திரஜாவை விட 15 வயசு மூத்தவர். ரோபோ ஷங்கர் மகளுக்கு ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். அத்துடன் 100க்கும் மேற்பட்ட சவரன் நகை போட்டுள்ளாராம். மேலும் அவரிடம் இருக்கும் மொத்த சொத்தும் ஒரே மகள் இந்திரஜாவுக்கு தான் என்றும் இதன் மூலம் அவருக்கு கோடி கணக்கில் வரதட்சணை கொடுக்கப்பட்டிருக்கும் என செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.
![ரோபோ சங்கர்](https://www.athirvu.in/wp-content/uploads/2024/04/03-3.jpg)
![ரோபோ சங்கர்](https://www.athirvu.in/wp-content/uploads/2024/04/01-5-1024x564.jpg)
![ரோபோ சங்கர்](https://www.athirvu.in/wp-content/uploads/2024/04/02-5.jpg)