பழைய அடையாள அட்டைக்கு விடைகொடுங்கள்! எதிர்காலத்தை மாற்றியமைக்க வரும் டிஜிட்டல் ID!

பழைய அடையாள அட்டைக்கு விடைகொடுங்கள்! எதிர்காலத்தை மாற்றியமைக்க வரும் டிஜிட்டல் ID!

இலங்கை, நவீன உலகத்துடன் போட்டி போடத் தயாராகிவிட்டது! ஆம், ஏப்ரல் 2026-க்குள் நாடு முழுவதும் டிஜிட்டல் அடையாள அட்டை (Digital ID) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இனி, காகிதத்தாலான பழைய அடையாள அட்டைகளை தேடி அலைய வேண்டியதில்லை!

இந்தியாவின் பெருங்கொடை! இந்த பிரம்மாண்டமான திட்டத்திற்கு, இந்திய அரசு சுமார் 10.4 பில்லியன் இலங்கை ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இது இலங்கை அரசுக்கு பெரும் நிதிச்சுமையைக் குறைத்துள்ளது.

MOSIP: பாதுகாப்பான எதிர்காலத்தின் திறவுகோல்? பிலிப்பைன்ஸ், மொராக்கோ போன்ற நாடுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் Modular Open-Source Identity Platform (MOSIP) என்ற தொழில்நுட்பம் தான் இந்த திட்டத்தின் முதுகெலும்பாக உள்ளது. இது மிகவும் செலவு குறைந்த, பாதுகாப்பான, மற்றும் நம் நாட்டின் இறையாண்மைக்கு உகந்த ஒரு அமைப்பு என்று அரசு கூறுகிறது.

குடிமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியா? இந்த டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. ஆனால், இந்த பயோமெட்ரிக் தரவுகள் (கைரேகை, கண் விழித்திரை) அதிநவீன மறையாக்க (multi-layer encryption) முறையில் பாதுகாக்கப்படும் என்று அரசு உறுதியளிக்கிறது.

ஆதாரை விட MOSIP சிறந்தது! பலர் நினைப்பதைப் போல, இது இந்தியாவின் ‘ஆதார்’ திட்டம் அல்ல. இது டிஜிட்டல் பாதுகாப்பு நிபுணர்களால் உருவாக்கப்பட்ட சர்வதேச திறந்த மூலத் தளம். இதுவரை இந்த அமைப்பில் எந்தவொரு தரவு திருட்டும் நடந்ததில்லை என்று அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டை, இலங்கையின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றப் போகிறது? இது ஒரு வரப்பிரசாதமா அல்லது ஒரு புதிய சவாலா? காலம் தான் பதில் சொல்லும்!