விமானம் பிடித்துப் போன விஜய் இன்று வரை எங்கே? பிரேமலதா விஜயகாந்த் அனல் பறக்கும் தாக்குதல்!

விமானம் பிடித்துப் போன விஜய் இன்று வரை எங்கே? பிரேமலதா விஜயகாந்த் அனல் பறக்கும் தாக்குதல்!

“ஒரு கட்சிக்கு தைரியம் இருக்க வேண்டும், வீரம் இருக்க வேண்டும்! நம்மால் ஒரு குடும்பத்திற்கு பாதிப்பு என்றால், முதல் ஆளாக நின்று உதவ வேண்டும். ஆனால், கரூரில் நடந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, அன்று ஃப்ளைட் பிடித்து வீட்டுக்குச் சென்ற விஜய், இன்று வரை வெளியில் வரவில்லை,” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்ற தேமுதிகவின் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, தமிழ் வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தை மையப்படுத்தி சரமாரியான கேள்விகளை எழுப்பினார்

 

அவர் மேலும் பேசியதாவது:

  • “கரூரில் பாதுகாப்பு கொடுக்கத் தெரியாமல் 41 உயிர்களைப் பலி கொடுத்துள்ளார்கள். அந்தச் சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகிறது.
  • இன்று இருப்பவர்கள் பேசுவது வெறும் சினிமா வசனம் மட்டுமே.
  • யாரோ செய்த தவறுக்காக, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்களைச் சந்திக்கக் கூடாது என தேமுதிகவை வஞ்சிக்காதீர்கள். மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான் நாங்கள் சென்று சந்திப்போம்!” என்று அரசுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

மொத்தத்தில், கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு மௌனம் காக்கும் விஜய் மீதும், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு மீதும் பிரேமலதா விஜயகாந்த் நடத்திய இந்த அனல் பறக்கும் தாக்குதல், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.