தொழிலதிபராக கால்பதிக்கும் புன்னகை அரசி சினேகா!

தொழிலதிபராக கால்பதிக்கும் புன்னகை அரசி சினேகா!

புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சினேகாவுக்கு இரண்டாவதாக மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதையடுத்து சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த சினேகா இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது சினேகா தொழிலதிபராக ஜவுளித் துறையில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். சினேகாலயா சில்க்ஸ் என்ற பட்டுப்புடவைகளுக்கான கடையை சென்னை தி நகரில் அவர் விரைவில் தொடங்கவுள்ளார்.