மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து இராணுவத்தினரும் தங்களது கடவுச்சீட்டுகளை அந்தந்த ரெஜிமென்ட்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே மேலும் கூறுகையில், இந்த நடவடிக்கை நிர்வாக ரீதியான விடயத்துடன் தொடர்புடையது.
இருப்பினும், தனிப்பட்ட காரணங்களுக்காக கடவுச்சீட்டுகளைப் பெற, சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரிவிப்பதன் மூலம் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.