வெசாக் தினங்களில் 3 நாட்களுக்கு அனைத்து காசினோக்கள் மற்றும் மது கடைகள் மூடப்படு

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்பொருள் அங்காடிகளின் விற்பனை நிலையங்கள், இறைச்சிக் கூடங்கள், பந்தய நிலையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் மதுபானம் பரிமாறும் அல்லது விற்பனை செய்யும் நிலையங்கள் அனைத்தும் மே 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய மே 10 முதல் மே 16 வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து விலங்கு இறைச்சிக் கூடங்கள், பல்பொருள் அங்காடிகளின் விற்பனை நிலையங்கள் உட்பட இறைச்சி விற்பனை நிலையங்கள், பந்தய நிலையங்கள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மற்றும் மதுபானம் பரிமாறும் அல்லது விற்பனை செய்யும் நிலையங்கள் அனைத்தும் மே 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.