Ex-IGP Deshabandu taken to Prison: தப்பி ஓடிக்கொண்டு இருந்த IGP தென்னக்கோன் பிடிபட்டார் ?

மாத்தறையில் நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்று கருதப்படும், முன் நாள் பொலிஸ் உயர் அதிகாரி Ex-IGP தென்னக்கோன், நேற்று(19) சரணடைந்துள்ளார். இது நாள் வரை அவர் சரணடையாமல், தப்பி ஓடிக்கொண்டு இருந்தார்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) தேசபந்து தென்னக்கோன் அங்கானகொலபெலஸ்ஸாவில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறை வட்டாரங்களின்படி, அவர் சிறையில் சாதாரண வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான தென்னக்கோனுக்கு நீதிமன்றம் இன்று (20) வரை விளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது. சுமார் 20 நாட்களாக கைது செய்யப்படாமல் தப்பித்து வந்த அவர், இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகாம பெலேனா பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) முன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் IGP தேசபந்து தென்னக்கோன் உட்பட எட்டு காவல்துறை அதிகாரிகளை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது மற்றும் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிட்டிருந்தது.