கணவன் கொழும்பில் வேலை: சுவர்ண லதா வன்னியில் 21 வயது இளைஞரோடு பெரும் வேலை …

யாழ் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு, தனது மனைவியின் தலையுடன் வந்த கணவரால் பொலிஸ் நிலையமே அதிர்ந்து போனது. ரத்தம் கூடக் காயாமல் ரத்தம் சொட்டச் சொட்ட கணவர் தனது மனைவியின் தலையை, மற்றும் வெட்ட பயன்படுத்திய கத்தியுடன் வந்து சரணடைந்தார். எந்த ஒரு மன நிலைக்கு அவர் தள்ளப்பட்டு இருந்தால், இப்படிச் செய்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்.

35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் , சுவர்ண லதாவை சில வருடங்களுக்கு முன்னர் திரத்தி திரத்தி காதலித்தார். அந்த இளம் ஜோடி, பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர, தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, சுகிர்தரன் நல்ல சம்பளத்திற்காக கொழும்புக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இந்த சைக்கிள் காப்பில்… சுவர்ண லதா சந்தில் சிந்துபாடியுள்ளார் !

அந்தப் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர், சுவர்ண லதாவோடு நெருங்கிப் பழகி வந்துள்ள நிலையில். திடீரென சுவர்ண லதா தான் 3 மாத கர்பம் என்று கூறவே. கணவனுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இருப்பினும் , தமது மனதை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். இதேவேளை சுவர்ண லதாவுக்கும் அந்த 21 வயது இளைஞனுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அதாவது 21 வயதில் தான் அப்பா ஆக முடியாது என்று இளைஞன் சொல்ல. பரவாயில்லை சுகிர்தரனின் பிள்ளை என்று சொல்லி சமாளிக்கலாம் என்று சுவர்ண லதா சொல்ல…

இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கருதிய இளைஞர், கொழும்பில் உள்ள சுகிர்தரனுக்கு தானும் சுவர்ண லதாவும் படுக்கையில் எடுத்த படு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியுள்ளார். உடனே கடும் கோபத்தில் கொழும்பில் இருந்து புறப்பட்டு வந்த சுகிர்தரன். சுவர்ண லதாவோடு வாக்கு வாதத்தில் ஈடுபட்டாலும் ஒரு வழியாக சமாதானப்படுத்தி விட்டார் சுவர்ண லதா. இதனால் தாய் சேய் நல விடுதியில் அவரை சேர்க்க சுகிர்தரன் முடிவு செய்தார்.

சுகிர்தரன் யாழ் சென்று திரும்பிய திங்கட் கிழமை, மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திங்கள் மாலை , கருவில் உள்ள பிள்ளை, அந்த 21 வயது இளைஞரால் உருவானது என்ற உண்மையை ஒத்துக் கொண்டார் சுவர்ண லதா. கோபத்தின் உச்சத்திற்கே சென்ற சுகிர்தரன், மறு நாள் (செவ்வாய் 03) அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்வதாக கூறி, சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்துச் சென்று அங்கே வைத்து கத்தியால் குத்தி அவரைக் கொலை செய்து விட்டு. தலையை அறுத்து தனது ரெயின் கோட்டில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

இப்படியான அற்ப உடல் உறவுக்காக, வயதான பெண்கள் பருவ இளைஞர்களை நாடுவது பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில். இளைஞர்களுக்கு தமது வயதுப் பெண்களை விட அம்மா வயதில், பாட்டி வயதில் உள்ள பெண்கள் மேல் ஈர்ப்பு அதிகரித்துள்ளது. AUNTY வெறியர்களாக மாறியுள்ள இளைஞர் சமுதாயத்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியவில்லை.  சரி உடல் உறவு ஆசை ஏற்பட்டு விட்டது. சரியான பாதுகாப்பு இல்லாமல் உறவில் ஏன் ஈடுபட வேண்டும் ? அது போக தற்போது 3 மாத கர்பிணியாக இருந்த சுவர்ண லதா தான் செய்த பாவத்திற்காக இறந்து விட்டார் என்று வைத்துக் கொண்டாலும், கருவில் உள்ள எதுவும் அறியாத அந்தப் பிள்ளை ஏன் சாக வேண்டும் ? 

இந்த உலகில் இருக்கும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இருக்கும் பொதுவான குணம் ஒன்று என்னவென்றால் உடல் உறவு தான். கடவுளோ இல்லை இயற்கையோ அல்லது ஏலியன்களோ எம்மை படைக்கும் போது, உடல் உறவு முக்கியம் என்பதனை மூளையில் திணித்து விட்டார்கள். அது இல்லையென்றால் உயிரினங்கள் அழிந்து பல நூறு வருடங்கள் ஆகி இருக்கும். அமீபா தொடக்கம் பக்ரீரியா வைரஸ் தொடக்கம், அனைவரும் உடல் உறவில் ஈடுபடுகிறார்கள். தனது இனம் பெருகவேண்டும் என்ற ஒரே குறிக்கோள். ஆனால் அதில் இருந்து 6 அறிவு உள்ள மனிதர்கள் மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கிறார்கள். மனிதனுடைய மனம் தான் அதற்கு காரணம்.

இப்படி மனதையும் கட்டுப் படுத்த முடியாமல், உறவையும் சரியாக பாதுகாக்க தெரியாமல், காட்டு மிருகங்கள் போல வாழும் மனிதர்களை என்ன என்று சொல்வது ? அதுவும் எத்தனை பாரம்பரியம் மிக்க தமிழ் இனத்திலா இப்படி நடக்க வேண்டும் ? அதிலும் ஈழத் தமிழர்கள் என்றால், வேற்று மொழி கலப்பே இல்லாத மற்றும் ராஜ ராஜ சோழ வம்சத்தினர் அல்லவா… மூத்த குடிகள்.. இன்று தராதரம் கெட்ட நிலையில்…இருப்பது பெரும் வேதனை…  புலிகள் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா ? என்ற கேள்வியும் மறு முனையில் எழுகிறது அல்லவா ?