BREAKING NEWS: வெளிநாட்டில் உள்ள தமிழர்களை துல்லியமாக வேவு பார்த்துள்ள அனுரா அரசு !

Today, the Government of Sri Lanka issued an Extraordinary Gazette notification. This notification includes Tamil individuals and Tamil entities from around the globe. The list in the Gazette has significantly increased compared to that of the Mahinda government. Additionally, many Tamil individuals have been newly added, and their foreign addresses are displayed. This indicates that the Sri Lankan government has invested a considerable amount of time and resources to locate these Tamil individuals.

இன்று வெளியாகியுள்ள, அரசாங்க வர்த்தமானி அறிக்கையில் புதிதாக பல தமிழர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். இதுபோக அவர்களின் வெளிநாடு வசிப்பிடங்களை(வீட்டை) இலங்கை அரசு பொது வெளியில் அறிவித்துள்ள விடையம், பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அனுராவின் அரசு, சமீப காலமாக ஈழத் தமிழர்களை கடுமையாக வேவு பார்கிறது என்பது, தெளிவாகப் புரிகிறது.

இது இலங்கை அரசுக்கு எப்படி சாத்தியமானது என்பது, அனுராவோடு இலங்கையில் ஒட்டி உறவாடும் தமிழர்களுக்கே வெளிச்சம். சிரித்து சிரித்து கடைசியில் ஆப்படித்த அனுராவுக்கு, இன்னும் சில தமிழர்கள் குடை பிடித்த வண்ணம் உள்ளார்கள் என்பதனை நினைக்க வேதனையாக இருக்கிறது. மகிந்த அரசு வெளியிட்ட பட்டியலை விட அனுரா அரசு வெளியிட்ட பட்டியல் நீளமாக உள்ளதோடு.

அதில் சில தமிழர்களின் பெயர்களை புதிதாக இணைத்துள்ளார்கள். இதனை பூசி மெழுக, ஐ.நா கொடுத்த தகவலின் அடிப்படையில் தாம் செயல்படுவதாக சாயம் பூசியும் உள்ளது இலங்கை அரசு. ஐ.நா எந்தக் காலத்தில் , ஒரு உள்நாட்டு அரசியல் விவகாரத்தில் தலையிட்டுள்ளது ? பல மூத்த தமிழ் செயல்பாட்டாளர்கள் படித்துப் படித்துச் சொன்னார்கள், ஆனால் வடக்கு தமிழர்கள் கேட்டபாடாக இல்லை. தற்போதாவது உணர்ந்து கொள்வார்களா தெரியவில்லை.