கொட்டாவ, மலப்பள்ள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூடு இன்று மாலை (8) அப்பகுதியில் உள்ள ஆலயமொன்றின் அருகே இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதுப்பிக்கப்பட்டது: கொட்டாவ, மலப்பள்ள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 43 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், உயிரிழந்த நபர் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதேவேளை, தாக்குதல்தாரி எவ்வாறு குற்ற இடத்திற்கு வந்தடைந்தார் என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.