இலங்கையின் காசை அழித்த பிரபலங்கள்: சுற்றுப் பயணப் போர்வையில் இத்தனை மில்லியனா ?

நேற்றைய (27) நாடாளுமன்ற அமர்வில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய வெளியிட்டார்.

இந்த விவரங்கள், கடந்த ஆண்டுகளாக ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் செய்த செலவுகளைக் குறித்த பரவலான புரிதலை வழங்குகின்றன.

பிரதமர் வழங்கிய முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டு பயண செலவுகளின் விபரம் வருமாறு:

  • மஹிந்த ராஜபக்ஸ (2010–2014): ரூ. 3,572 மில்லியன்
  • மைத்ரிபால சிறிசேன (2015–2019): ரூ. 384 மில்லியன்
  • கோட்டாபய ராஜபக்ஸ (2020–2022): ரூ. 126 மில்லியன்
  • ரணில் விக்கிரமசிங்க (2023–2024): ரூ. 533 மில்லியன்
  • அனுர குமார திஸாநாயக்க (செப். 2024–பெப். 2025): ரூ. 1.8 மில்லியன்

பிரதமர் அமரசூரிய குறிப்பிட்டதாவது, 2010 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில், 2013 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு அரசாங்கம் ரூ. 1,144 மில்லியன் செலவிட்டது. இது குறித்த காலத்தில் ஏற்பட்ட மிக உயர்ந்த செலவாகும்.