கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசமைக் கைது செய்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக , அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள போராட்டக்காரர்களை ‘கிளர்ச்சியாளர்கள்’ என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
தன்னைக் கைது செய்யுமாறு நியூசம் விடுத்த சவாலுக்குப் பதிலளித்த டிரம்ப், “நான் அதைச் செய்வேன்,” என்று திட்டவட்டமாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “நான் கவின் நியூசமை விரும்புகிறேன், அவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் அவர் முற்றிலும் திறமையற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும்,” என்றும் குறிப்பிட்டார்.
போராட்டக்காரர்கள் குறித்து மேலும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய டிரம்ப், வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரச்சினையை உருவாக்குபவர்கள் தொழில்முறை கிளர்ச்சியாளர்கள் மற்றும் தேசத்துரோகிகள்,” என்றார். “அவர்கள் மோசமானவர்கள். அவர்கள் சிறையில் இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டுக் கிளர்ச்சியை அடக்குவதற்கு ராணுவத் துருப்புகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் 1807 கிளர்ச்சிச் சட்டத்தை (ஈன்சுர்ரெcடிஒன் ஆcட்) அமல்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு அதிபர் டிரம்ப் பதிலளிக்கவில்லை.