கனடாவில் கொலை இலங்கை இளைஞர்கள் இருவர் கைது!

கனடாவின் டொரண்டோ பகுதியில் கடந்த 6 மற்றும் 8 ஆம் தேதிகளில் இடம்பெற்ற இரண்டு கொலை சம்பவங்கள் தொடர்பாக, அங்கு வசிக்கும் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 31 மற்றும் 34 வயதுடையவர்கள். இவர்கள் இருவரும் இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து வேலைவாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று, அங்கு குடியேறியவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் கனடாவில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் மற்றும் பல சொத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.