[ஆதார புகைப்படங்கள் கீழே இணைப்பு]
நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்திகளை, மேலதிக விபரங்களோடு ருயீட்டர் செய்தி நிறுவனம் மற்றும் அல்ஜசீரா சர்வதேச செய்திச் சேவை என்பன வெளியிட்டுள்ளது. பாக்கிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாபில் , JASRAUR என்னும் இடத்தில் PL-15 சீன ஏவுகணையின் துகள்கள் மற்றும் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய போர் விமானமான மிக் 29 குறித்த இடத்தில் தான் வெடித்துள்ளது. இதனை தாக்கிய சீன ஏவுகணையின் பாகங்களை இந்திய ராணுவ புலணாய்வு அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
J10C சீன போர் விமானம், இதன் விலை $40M மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆனால் இந்தியா பிரான்சிடம் இருந்து வாங்கிய ராஃபில் விமானத்தின் விலை $ 120 M மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆனால் இந்த பிரான்ஸ் தயாரிப்பான ராஃபில் விமானத்தை மிகவும் சிம்பிளாக , சீனாவின் J10C விமானம் சுட்டு வீழ்த்துகிறது, என்பது பல நாட்டு ராணுவ வட்டாரங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனை விட மோசமான விடையம் என்னவென்றால், இந்த J10Cல் பொருத்தப்பட்டுள்ள சீன ஏவுகணையான PL15, சுமார் 300 KM வரை திரத்திச் சென்று போர் விமானத்தை தாக்க வல்லது. இதனால் இந்த ஏவுகணையிடம் இருந்து தாப்புவது என்பது முடியாத காரியம். ஆனால் சீனா ஏனைய நாடுகளுக்கு இதனை விற்பனை செய்யும் போது, ஆற்றல் குறைந்த ஏவுகணைகளையே விற்பனை செய்கிறது. அதாவது சீனா பாக்கிஸ்தானுக்கு கொடுத்துள்ள PL15 ஏவுகணை வெறும் 90 முதல் 100 KM வரை தான் திரத்திச் செல்லும்.
அப்படி பார்க்கும் போது சீனாவிடம் மிகவும் அதி நவீன, மற்றும் துல்லியமாக தாக்க வல்ல ஏவுகணைகள் இருக்கிறது என்பது உறுதி. இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள், கருதும் ஒரு விடையம் உள்ளது. அதாவது சீன தயாரிப்பு பொருட்களை இந்தியர்கள் டம்மியாக(DUMMY) தான் பார்கிறார்கள். சீன தயாரிப்பு என்றாலே ஒரு நக்கல் நளினம் உள்ளது. அது சீனாவின் டுபிளிகேட் தயாரிப்புகள். ஆனால் ராணுவ தளபாட தயாரிப்புகள் அப்படி அல்ல. அமெரிக்கவையே கதறவிடும் அளவு ராணுவ ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளது என்பது உண்மை.
எனவே தற்போது நடப்பது இந்திய பாக் யுத்தம் என்று சொல்ல முடியாது. இந்தியா மறைமுகமாக மோதுவது சீனாவோடு தான். காரணம் சீன அள்ளிக் கொடுத்துள்ள ஆயுதங்களோடு தான் இந்தியா மோதுகிறது. எனவே இந்திய அரசு கள நிலைகளை நன்றாக அறிந்து, பாக்கிஸ்தானின் வீக் பயிண்டை பார்த்து அடிப்பதே நல்லது. சீன ஆயுதங்களை குறைத்து மதிப்பிட்டால், பெரும் பொறிக்குள் இந்தியா சிக்கித் தவிக்கும். மேலும் சொல்லப் போனால் பாக்கிஸ்தான் இப்படி ஒரு போருக்கு தன்னை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த Pahalgam attack தாக்குதலே ஒரு நாடகமாக இருக்கலாம். இந்தியாவை போருக்குள் இழுக்க சீனா மற்றும் பாக்கிஸ்தான் போட்ட சதி நாடக தாக்குதலாக Pahalgam attack இருக்கலாம்… இந்தியா எச்சரிக்கையோடு ஒவ்வொரு காலடியையும் வைப்பது நல்லது !
தற்போது இந்தியா எடுத்துள்ள தற்கொலை ஆளில்லா(ட்ரோன்) விமான தாக்குதல் நல்ல விடையம். மயிரை கட்டி மலையை இழுப்பது போல, அறுந்தா மயிர் வந்தால் மலை… ட்ரோன்கள் ஒன்றும் பெரிய விலை அல்ல. இருந்தாலும் இஸ்ரேல் தயாரிப்பு தாக்குதல் ட்ரோன்களை இந்தியா பாவிக்கிறது. இருப்பினும் இந்தியா இப்படியான ட்ரோன்களை தாமே தயாரித்து பாக்கிஸ்தான் மீது தாக்குவது, செலவைக் குறைக்கும் …