பிரித்தானியா போன்ற ஒரு நாட்டை உலகில் பார்பதே மிகவும் கடினம் என்று தான் கூறவேண்டும். பல உலக நாட்டு தலைவர்கள் பெரும் செல்வந்தராகவே இருக்கிறார்கள். அதிலும் இந்தியாவை எடுத்துக் கொண்டால் அங்கே உள்ள ஒரு MPயிடம் உள்ள பணம், லண்டனில் உள்ள மகாராணியிடம் கூட இருக்காது என்று சொல்லலாம்.
இதேவேளை பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமர், தனக்கு இலவசமாக கிடைத்த பொருட்களின் பட்டியலை திறைசேரிக்கு அறிவித்து, அதற்காக 16,000 ஆயிரம் பவுண்டுகளை TAX கட்டியுள்ளார். கடந்த ஆண்டில் இருந்து இந்த மாதம்(ஏப்பிரல்) வரை அவருக்கு சுமார் 150,000 ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியான அன்பளிப்புகள் கிடைத்துள்ளது. அவை அனைத்திற்குமான வரியை பிரதமர் கட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா தனது சட்ட திட்டங்களை மிகவும் கடினமாக கடைப்பிடித்து வருகிறது. எவர் பிழை விட்டாலும் அது பிழை தான். அதற்கு நல்ல உதாரணம், பிரித்தானியாவின் அதி உச்ச பதவியில் இருப்பவர், மகாராணியின் கணவர் பிலிப். அவர் ஒரு முறை தனது ரேஞ் ரோவர் காரை ஒட்டிச் சென்று விபத்தில் சிக்கினார். இதில் தலையிட்ட பொலிசார், அவரை இனி கார் ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.
உடனே இளவரசர் பிலிப் அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டார். தற்போது மிகவும் நேர்மையான முறையில் பிரித்தானிய பிரதமர் அவர்கள் நடந்துகொண்டுள்ள விடையம் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.