Moscow comes under massive drone attack: ரஷ்ய தலை நகர் மீது உக்ரைன் கடும் தாக்குதல் BREAKING NEWS

Moscow comes under massive drone attack: ரஷ்ய தலை நகர் மீது உக்ரைன் கடும் தாக்குதல் BREAKING NEWS

நூற்றுக் கணக்கான ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவுக்குள் ஊடுருவி, மாஸ்கோ வரை சென்று தாக்கியுள்ள விடையம், ரஷ்ய வான் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள், அமெரிக்காவுடன் முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், மாஸ்கோ மீது மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூவர் காயமடைந்தனர் என்று கூறியுள்ளது ரஷ்யா.

உக்ரைன் அமெரிக்கா இடையே முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள அதே நாளில், உக்ரைனின் மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்யா தாக்கப்பட்டது என்று மாஸ்கோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், 10 ரஷ்ய பிராந்தியங்களில் ஒரே இரவில் 337 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று தெரிவித்துள்ளது, இதேவேளை மாஸ்கோவால் தொடங்கப்பட்ட சமீபத்திய மிருகத்தனமான தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்தது என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தலைநகர் மொஸ்கோவில், உயரமான பல கட்டடங்கள் தீ பிடித்து எரிந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடனான மூன்று வருட போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் மார்கோ ரூபியோவை உக்ரேனிய பிரதிநிதிகள் சந்திக்க இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மாஸ்கோ மற்றும் பிற ரஷ்ய பிராந்தியங்களை ஒரே இரவில் உலுக்கிய இந்த தாக்குதல்கள் குறித்து உக்ரைன் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. உக்ரைனின் எல்லையில் உள்ள குர்ஸ்கில் அதிக ஆளில்லா விமானங்கள் (126) சுட்டு வீழ்த்தப்பட்டன, இதன் சில பகுதிகளை கீவ் படைகள் கட்டுப்படுத்துகின்றன, அதே நேரத்தில் மாஸ்கோ பிராந்தியத்தில் 91 சுட்டு வீழ்த்தப்பட்டன. இருப்பினும் நூற்றுக் கணக்கான ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவுக்குள் ஊடுருவி, மாஸ்கோ வரை சென்று தாக்கியுள்ள விடையம், ரஷ்ய வான் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.