வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ஊடாக, ரஷ்யாவின் பல தளங்களை ஏக காலத்தில் உக்ரைன் தாக்கியுள்ள விடையம் வெளியாகியுள்ளது. சுமார் 70க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. 2 நாட்கள் ஆகியும் நெருப்பு இன்னும் அணையவில்லை. இது எப்படி நடந்தது என்பது, சினிமா படங்களை மிஞ்சும் காட்சியாக உள்ளது. ஆப்பரேஷன் “ஸ்பைடன் வெப்” என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போது ரஷ்யாவே கொந்தளித்துப் போய் உள்ளது, இனி புட்டின் எந்த நடவடிக்கையிலும் இறங்க வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ள பிரிட்டன் தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் சொல்லப் போனால் நேட்டோ படைகள் அலேட் ஆகியுள்ளது. ஒரு பெரிய கண்டேனரில் , ட்ரோன்களை வைத்து அனுப்பியுள்ளது உக்ரைன். கண்டேனருக்குள் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல், அதனை ஓட்டிச் சென்றுள்ளார் ஒரு ரஷ்ய லாரி ஓட்டுனர்.
சரியான இடத்தை அடைந்த உடனே கண்டேனர் கதவு திறக்க. திடீரென சீறிப்பாய்ந்த ட்ரோன்கள் ரஷ்யாவின் 3 தளங்களை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதனை ரஷ்யா எதிர்பார்கவில்லை. ரஷ்யாவுக்கு உள்ளே மிகவும் ஆழமான இடம், பல நூறு KM உள்ளே இருந்த தளங்கள் என்பதனால் இவற்றை ராடர் கொண்டு பாதுகாக்க தேவை இல்லை. காரணம் இந்த தளங்கள் நோக்கி எதிரி விமானம் வந்தால், அதனை முன்னரே சுட்டு வீழ்த்த S-400 கருவிகள் பல நூறு KM முன்னால் உள்ளது.
இதனால் “பெலியா” வான் படை தளம், “டயாகிலோவ்”” வான் படை தளம், மற்றும் ஒலினியா வான் படை தளம் என்பன, பெரிய அளவில் வான் பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. இதனை சாதகாக துல்லியமாக அறிந்த உக்ரைன். அந்த இடத்தை விமானம் மூலம் நெருங்க முடியாது என்பதனை தெரிந்து. ஏதோ பொருட்களை ஒரு இடத்திற்கு அனுப்புவது போல, கண்டேனரை அனுப்பியுள்ளது. சரியான ஒரு இலக்கை அடைந்த உடனே கண்டேனர் கதவுகள் ஆட்டமெட்டிக்காக திறக்க, வானில் சீறிப் பாய்ந்த ட்ரோன்கள் , 3 தளங்களையும் தாக்க…
ரஷ்ய வான் படையே தற்போது நிலை குலைந்து விட்டது. மேலும் சொல்லப் போனால் அதில் உள்ள ஒரு ட்ரோன், வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து தனது கட்டளை தளத்திற்கு அனுப்ப. மேலும் ஒரு ட்ரோன் தாக்குதல் முடிந்த வேளை, தான் பயணித்த கண்டேனரையும் தாக்கி அழிக்க. எந்த ஒரு தடையமும் இன்றி, உக்ரைன் இந்த தாக்குதலை படு சக்ஸ்சஸாக முடித்துள்ளது. இது போன்ற தாக்குதல் யுக்தியை இனி எந்த ஒரு நாடும் எதிரி நாடு மீது நடத்தக் கூடும். என்ற அளவு இது ஒரு புது வியூகமாக உள்ளது.
AI அதாவது செயற்கை நுண் அறிவு கொண்ட இந்த ட்ரோன்கள் கட்டடங்களை தாக்கவில்லை. சரியாக குறி வைத்து விமானங்களையும் எதிரியின் ஆயுதக் கிடங்குகளையும் தான் தாக்கியுள்ளது. தாம் எதனை தாக்கப் போகிறோம் என்பது இந்த ட்ரோன்களுக்கு தெரியும். அந்த வகையில் பார்த்தால் இது மிக மிக ஆபத்தான ஒரு தாக்குதல் திட்டமாக உள்ளது.