மனித உரிமை ஆர்வலர் பெண் அதிரடியாக கைது: களத்தில் குதித்த மக்கள்!

பாகிஸ்தானின் பலோச் சிறுபான்மை இனத்தவருக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணி பங்காற்றிய ஆர்வலர் மஹ்ராங் பலோச் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்குப் பின்னர் அவரது வழக்கறிஞருக்கு சிறையில் சந்திப்பு மறுக்கப்பட்டுள்ளது. மஹ்ராங்கின் சகோதரி நாடியா பலோச், ஹுட்டா மாவட்ட சிறையில் சில நிமிடங்கள் மட்டுமே சந்திப்பு அனுமதிக்கப்பட்டதாகவும், மஹ்ராங் பலவீனமாகவும் மன அழுத்தத்துடனும் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் கொண்டு வந்த உணவு மற்றும் வழக்கறிஞருக்கு சந்திப்பு மறுக்கப்பட்டுள்ளது.

பலோச் மக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடும் மஹ்ராங் பலோச், பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் வாழும் சுமார் 10-15 மில்லியன் பலோச் மக்களின் தன்னாட்சி கோரிக்கைகளுக்காக செயல்பட்டு வருகிறார். பலோச் விடுதலை இராணுவம் (BLA) மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கிடையே நடந்த மோதல்களுக்குப் பிறகு, பலோச் மனித உரிமை ஆர்வலர்கள் மீது அரசின் அழுத்தம் அதிகரித்துள்ளது. மார்ச் 11 அன்று ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தலுக்குப் பிறகு, பலோச் ஒற்றுமைக் குழு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

மஹ்ராங் பலோச், கைது செய்யப்பட்ட ஆர்வலர்களின் விடுவிப்புக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் படையினர் சுட்டதில் மூவர் கொல்லப்பட்டனர். மஹ்ராங்கின் வழக்கறிஞர் இம்ரான் பலோச், அவரது பணி அரசுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், TIME100 நெக்ஸ்ட் பட்டியலில் இடம்பெற்ற பின்னர் அவர் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார். 2025 நோபல் சமாதான பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர், அவர் மீது அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள், மஹ்ராங் பலோச் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். மஹ்ராங்கின் சகோதரி நாடியா, மூன்று நாட்கள் சிறைக்கு சென்றும் சந்திப்பு மறுக்கப்பட்டதாகவும், பட்டினி கட்சி போராட்டம் அறிவித்த பின்னரே சில நிமிடங்கள் சந்திப்பு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மஹ்ராங்குக்கு தனது கைது காரணம் தெரியாது என்றும், வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்காதது சட்டவிரோதம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.