தமிழர்களுக்கு தெரியாத உண்மை: பிரிட்டிஷ் தமிழ் தம்பதியின் $10 பில்லியன் எண்ணெய் சாம்ராஜ்யம்

நான் தான் பெரிய பணக்காரன் , இல்லை நான் தான் பெரிய மாஃபியா , இல்லை இல்லை… இந்தியாவில் படம் எடுத்து பிலிம் காட்டும் மற்றும் மோபைல் நிறுவனத்தை வைத்திருக்கும் நான் தான் பெரிய பணக்காரன் என்று படம் காட்டும் இந்த உலகில். யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவு பெரும் செல்வந்தராக ஈழத் தமிழர் தம்பதிகள் உள்ளார்கள்.இவர்கள் புதிதாக முளைத்த செல்வந்தர்களை போல பீத்திக் கொள்வது இல்லை … ஆனால் யார் இவர்கள் ? இதோ அதிர்வின் ஒரு ஆராட்சி >>>>

பிரிட்டிஷ் தமிழரான வின்ஸ்டன் (சஞ்சீவ் குமார்) மற்றும் அரணி சூசைப்பிள்ளை தம்பதியினர், அமைதியான முறையில் $10 பில்லியன் மதிப்புள்ள எண்ணெய் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள செய்தி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் 1999 ஆம் ஆண்டில் “பிராக்ஸ்” (Prax) என்ற தங்கள் நிறுவனத்தை நிறுவினர்.

ஆரம்பத்தில் டீசல் கலவையில் நிபுணத்துவம் பெற்ற இந்த நிறுவனம், படிப்படியாக பிற எரிபொருட்களுக்கும் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தியது. இவர்களின் நிறுவன வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது, 2021 இல் வட கில்லிங்ஹோமில் உள்ள லிண்ட்சே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (Lindsey Oil Refinery) ஒரு பங்கை வாங்கியது. இந்த கையகப்படுத்தல், பிராக்ஸ் நிறுவனத்தை ஒரு உலகளாவிய நிறுவனமாக வளர்த்ததுடன், சுமார் $10 பில்லியன் வருவாயையும் ஈட்டித் தந்துள்ளது.

தற்போது, பிராக்ஸ் குழுமம் இங்கிலாந்தின் மிகப்பெரிய பெட்ரோலியப் பொருட்கள் சப்ளையர்களில் ஒன்றாகும். வின்ஸ்டன் (சஞ்சீவ் குமார்) நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார், அதே நேரத்தில் அரணி சூசைப்பிள்ளை மனித வளங்கள் மற்றும் பெருநிறுவன அதிகாரியாக முக்கியப் பங்காற்றுகிறார். இந்த பிரிட்டிஷ் தமிழ் தம்பதியினர், ஒரு சிறிய தொடக்கத்திலிருந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சாம்ராஜ்யங்களில் ஒன்றைக் கட்டியெழுப்பியுள்ளனர்.

இன்று இவர்கள் நினைத்துப் பார்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்றால். அவர்களது ஓயாத உழைப்பும், தன் நம்பிக்கையும் , எதனையும் சாதிக்க முடியும் என்ற உணர்வும், தைரியமுமே காரணம் ஆகும். இந்த தம்பதிகளுக்கு ஒரு சல்லியூட்…. மேலும் இவர்கள் வெற்றி அடைய எமது வாழ்த்துக்கள்…