2028ல் ரஷ்யா லண்டனை தாக்கும்: கிடைத்துள்ள INTEL- தகவலால் கடலை பாதுகாக்க ஆரம்பித்துள்ளது பிரிட்டன் !

2028-ஆம் ஆண்டு ரஷ்யா ஒரு பெரும் போரைத் தொடுக்கலாம் என்ற உளவுத் தகவலைத் தொடர்ந்து, பிரித்தானியா தனது இராணுவ பலத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் ரஷ்யா ஸ்வீடன் நாட்டைத் தாக்கக்கூடும் என்றும், ஸ்வீடன் நேட்டோ உறுப்பு நாடு என்பதால், நேட்டோ படைகள் ரஷ்யாவை நேரடியாகத் தாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

ஐரோப்பாவில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் சில நாடுகளில் பிரித்தானியாவும் அடங்கும். இதன் காரணமாக, ரஷ்யா முதலில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளையும் தாக்கி அழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே நேட்டோ படைகளை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது. இல்லையெனில், பிரித்தானியா தனது அதிநவீன ஆயுதங்களை உடனே நேட்டோ படைகளுக்கு வழங்கத் தொடங்கிவிடும். மேலும், பிரித்தானியா அமெரிக்கா, கனடா, மற்றும் ஆஸ்திரேலிய படைகள் ரஷ்யாவை நோக்கிச் செல்ல ஒரு முக்கிய தளமாக மாறிவிடும்.

பிரித்தானியக் கடல் பரப்பில் தற்போது ரஷ்யாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நடமாடத் தொடங்கியுள்ளன. பலமுறை பிரித்தானிய கடற்படை அவற்றைக் கண்காணித்து விரட்டியுள்ளது. இதனால், பிரித்தானியா இன்றைய தினத்தில் (ஜூன் 3) இருந்து, புமா ட்ரோன் (Puma drone) வகை ட்ரோன்களை தனது எல்லைகளில் பறக்கவிட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் 24 மணி நேரமும் பறப்பில் ஈடுபடுவதோடு, நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிந்து தளத்திற்கு தகவல் அனுப்பும் வல்லமை கொண்டவை.

இது இவ்வாறிருக்க, பிரித்தானியா தனது மொத்த வருமானத்தில் பாதுகாப்புச் செலவை மேலும் 3% அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 53.9 பில்லியன் பவுண்டுகளை பாதுகாப்புக்காக செலவிடவுள்ளது. இது இலங்கையின் மொத்தக் கடனில் சரியாக அரைப் பங்கு ஆகும். ரஷ்யா தனது பாதுகாப்புக்காக சுமார் 75 பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகிறது. இந்த நிலையில், பிரித்தானியா தனது அணு ஆயுதங்களை விமானத்தில் பொருத்தி, எந்த நேரத்திலும் ஏவும் திறன் கொண்ட விமானங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 60 நாட்களாக பிரித்தானியா எடுத்து வரும் நடவடிக்கைகளை நோக்கும்போது, ஏதோ ஒரு பெரிய அளவில் போர் ஒன்று நடக்க உள்ளதையே இது காட்டுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.